Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கிஷ்த்வார்: ஜம்மு காஷ்மீன் கிஷ்த்வாரில் போலீசார் மற்றும் ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது, ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுபற்றி டிஐஜி உதயபாஸ்கர் கூறுகையில், ‘ஆகஸ்ட் 5ம் தேதி நள்ளிரவில், 2 இளைஞர்கள் காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அநேகமாக அவர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, அவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டு குழு நேற்றிரவு அவர்களைக் கைது செய்தது’ என்றார்.
இதற்கிடையே, அனந்த்நாக் மாவட்டம் லால் சவுக் பகுதியில் இன்று கணவன்-மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.